இது தான் பரிசுத்த ஆவியானவர் நம்மைச் சத்தியத்துக்குள் நடத்தும் விதம். இப்படி ஒவ்வொரு நிலையையும் கடக்கும் போதெல்லாம், ஒரு ஆனந்த திருப்தி ஏற்படுவது இயல்பு. ஆனால் அந்தந்த இடங்களில் கிடைக்கும் தற்காலிக திருப்தியில் மயங்கி, ‘அடைந்தாயிற்று’ என்றெண்ணி, தன்னையொத்த ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு, அங்காங்கே கூடாரம் போட்டு நிரந்தரமாகக் குடியேறும் போதுதான், பிரிவுகளும் பின்னடைவுகளும் ஏற்படத் துவங்குகின்றன. குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்து உணர்ந்துகொள்ள முயற்சித்த கதையைப் போன்றது தான் இதுவும்.